Tuesday, June 24, 2014

இலங்கையில் நாளாந்தம் ஐந்து அல்லது ஆறு சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் - பொலிஸ் தலைமையகம்

இலங்கையில் நாளாந்தம்  ஐந்து அல்லது ஆறு  சிறுவர்  துஷ்பிரயோக  சம்பவங்கள் பதிவாவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

இதனடிப்படையில், வருடாந்தம் இத்தகைய  இரண்டாயிரம் சம்பவங்கள் பதிவாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

இவற்றில் 90 வீதமானவை, சிறுமிகளின் விருப்பத்துடனேயே இடம்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எது எவ்வாறாயினும் அது சட்டத்தின் முன் தவறே எனவ பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சுட்டிக்காட்டினார்.

சிறுவர் துஷ்பிரயோகம் குறைக்கப்பட வேண்டுமாயின் பல தரப்பினருக்கு இது தொடர்பில் பொறுப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுவர்களின் பேற்றோர் ஆசிரியர்கள், மற்றும் அவர்களின் தற்காலிக பாதுகாவலர்களிடமே அதற்கான பொறுப்பு காணப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறினார்.
Disqus Comments